29 செ.மீ உயரம்; ரூ.25 கோடி மதிப்பு? - சென்னையில் பச்சைக்கல் லிங்கம் பறிமுதல் செய்யப்பட்டது எப்படி?



தமிழகத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சிலைகளை மீட்கும் பணியைச் சிலைத் திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிரமாகச் செய்துவருகிறார்கள். இந்நிலையில், சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில் பழைமையான உலோக நாகாபரணத்துடன்கூடிய பச்சைக்கல் லிங்கம் ஒன்று பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலை அடுத்து, சிலையை வைத்திருந்தவர்களிடம் போலீஸார் சிலை வாங்கும் வியாபாரிகள்போல விலை பேசியிருக்கின்றனர்.

சிலை வைத்திருந்தவர்களிடம் விலை பேசியதில், 25 கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வியாபாரிகள்போல நேரில் சென்று...

விரிவாக படிக்க >>

Comments