Posts

Showing posts with the label #crime

கோகுல்ராஜ் கொலை வழக்கு…. முதல் குற்றவாளியான யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை…. அதிரடி உத்தரவு…..!!!!!

Image
கோகுல்ராஜ் கொலை வழக்கு…. முதல் குற்றவாளியான யுவராஜுக்கு ஆயுள் முழுவதும் சிறை…. அதிரடி உத்தரவு…..!!!!! சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த கொடூர கொலையில் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.   இவ்வழக்கில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் வாயிலாக தொடர்ந்து ஆடியோ மற்றும் வீடியோக்களை யுவராஜ் வெளியிட்டு வந்தார். அதன்பின் அவர் 11/10/2015 அன்று நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் மேலும் 16 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். சாதி

மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை!

Image
மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை! உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா (22). ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோகண்டி பகுதியில் மனைவியுடன் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் கிருஷ்ணா செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். இதை பூஜா கண்டித்துள்ளார். இதனால் தம்பதி இடையே  வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த கிருஷ்ணா, மனைவி கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டுகொண்டார். திரும்பி வந்த பூஜா, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.  அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கிருஷ்ணாவை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.