எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது.!.. படக்குழு அதிர்ச்சி !


எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது.!.. படக்குழு அதிர்ச்சி !


சூர்யா நடிப்பில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தியேட்டரில் வெளியாகிவுள்ளது. இதற்கு முன்பு அவரின் நடிப்பில் வெளியாகியிருந்த சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும், ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. காப்பான் திரைப்படத்துக்குப் பிறகு திரையரங்கில் வெளியாகும் சூர்யாவின் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் பான் இந்தியத் திரைப்படமாக இப்படம் வெளியாகி உள்ளது. நேற்று காலை வெளியான இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், படம் வெளியான முதல் நாளே தமிழ்ராக்கர்ஸ், மூவிரூல்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.

நெட்டில் படம் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடையை மீறி படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளதை அடுத்து, தயாரிப்பு நிறுவனம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Comments

Popular posts from this blog

Fall Winter Boots

Experience the Magic of Christmas in London with these Festive Activities

Dark Gray and Blue Chevron Personalize Beach Towel by MyCPStore