குற்றவாளி யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றம்


குற்றவாளி யுவராஜ் கோவை மத்திய சிறைக்கு மாற்றம்


கோகுல்ராஜ் கொலை வழக்கு குற்றவாளி யுவராஜ் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்டம் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று காலை யுவராஜ் மட்டும் மதுரை மத்திய சிறையிலிருந்து கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Comments