வெயில் வந்தாச்சு, தோலை பாதுகாக்க முதல்ல செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


வெயில் வந்தாச்சு, தோலை பாதுகாக்க முதல்ல செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?


கோடைக்காலம் வந்துவிட்டது. கோடை தொடர்பான சருமபிரச்சனைகளும் வந்துவிட்டது. சருமம் அடிக்கடி எண்ணெய்பசையாக மாறலாம். கோடையில் சருமத்தை இயற்கையாக பார்த்துக்கொள்ள சில பராமரிப்புகள் உண்டு.

கடுமையான புற ஊதாக்கதிர்களுக்கு ஓய்வு இல்லாம இருக்கலாம். கதிர்கள் மற்றும் வெடிப்புகளிலிருந்து உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் தோல் பராமரிப்பு வழக்கத்தில் முக்கியமானவை என்ன என்பதை பார்க்கலாம்.

கோடையில் நீரேற்றத்துடன் இருங்கள்


கோடையில் உங்கள் சருமத்தை இயற்கையான முறையில் கவனித்துகொள்வதற்கான மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு எனில் நீங்கள் நன்கு நீரேற்றமாக இருப்பதுதான். வழக்கமான மற்றும் போதுமான தண்ணீரை எடுத்துகொள்வது நல்ல மற்றும் பளபளப்பான சருமத்தை அளிக்கும்.

உடலில் நீர் மற்றும் இரத்தம் இரண்டுமே நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது அரிப்பு, முகப்பரு, அரிக்கும் தோலழற்சி அல்லது சொரியாசிஸ் போன்ற தோல் நிலைகள் உண்டாவதை தடுக்கிறது. தேவையான நீர் உட்கொள்ளல் 4-8 லிட்டர் தண்ணீருக்கு இடையில் குடித்தால் மிக நல்லது. தண்ணீருடன் சாறுகள், கோடைக்கால பானங்கள், பழச்சாறுகள் போன்ற திரவ உணவை நீங்கள் அதிகரிக்கலாம். இது மறைமுகமாக ஊட்டச்சத்துக்களால் உங்களுக்கு ஊட்டமளிக்கும்.

முகத்தை சுத்தமாக வைத்திருக்க க்ளென்சிங் செய்யுங்கள்

சருமத்தை சுத்தமாக வைத்திருக்க யாரும் போதுமான அளவு வலியுறுத்த முடியாது. கோடையில் சருமத்தில் வியர்வை உருவாக்கம் சருமத்தை சேதப்படுத்தும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் பருக்கள் மற்றும் நிறமிகள் கூட உங்கள் சரும ஆரோக்கியத்தை கெடுக்கும்.

உங்கள் முகம் மற்றும் கழுத்தை தொடர்ந்து சுத்தம் செய்வது தான் சருமத்தை சுத்தம் செய்வதன் முதல் படி. வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தால் இலேசான சல்பேட் இல்லாத க்ளென்சரை பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவவும். வீட்டில் இருந்தால் குளிர்ந்த நீரே போதுமானது. இதனால் தோலில் உள்ள் அழுக்குகள் வெளியேறும்.

புதிய பழங்களை சாப்பிடுங்கள்

பழங்கள் உங்கள் சருமத்துக்கு தேவையான மென்மையை வழங்க தேவையான ஆன்டி ஆக்ஸிடண்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் செழுமையுடன் நிரம்பியுள்ளது.
ஆரஞ்சு இனிப்பு, எலுமிச்சை, கிவி, மாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் அன்னாசி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்ளுங்கள். இது உடலில் வைட்டமின் சி அதிகரிக்கிறது. மேலும் கொலாஜனை உற்பத்தி செய்ய தேவைப்படுகிறது. சருமத்தின் அமைப்பு மற்றும் நெகிழ்ச்சிக்கு இந்த கொலாஜன் புரதம் முக்கியமானது.

அத்தகைய பழங்களை எடுத்துகொள்வது ஒன்றுக்கு மேற்பட்ட நன்மைகளை அளிக்கும். இது சருமத்தை கவனித்துகொள்வதிலும் இரண்டு வகையில் உதவுகிறது. உள்புறத்திலிருந்து உள் உறுப்பை சுத்தமாகவும். வெளிப்புறத்திலிருந்து பொலிவாகவும் வைக்க உதவுவது அவசியம்.

மாய்சுரைசர் பயன்படுத்துங்கள்

சருமத்துக்கு மாய்சுரைசர் தேவை. வறண்ட சருமம், அரிப்பு மற்றும் மிகவும் சங்கடமான தோல் நிலைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும் அவை தீங்கு விளைவிக்காது. தோல் பழுதுபார்க்கும் பணிகளை செய்ய ஈரப்பதம் அவசியம். தினமும் குளித்த பிறகு மற்றும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குவதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். தோல் நிலையான மீளுருவாக்கம் செயல்முறைக்கு உட்படுகிறது. இது போதுமான ஈரப்பதத்தை அளிக்கும் போது சருமம் நீரேற்றமாக இருக்கும்.

ஹைஉரோனிக் அமிலம் அல்லது வைட்டமின் சி உட்செலுத்தப்பட்ட மாய்சுரைசர் அல்லது சீரம் ஆகியவற்றை பயன்படுத்தவும். இது சருமத்துக்கு சிறந்த நீரேற்றத்தை வழங்கும்.

இவையெல்லாம் கோடை துவங்குவதற்கு முன்பு சருமத்துக்கு செய்ய வேண்டிய முக்கிய பராமரிப்பு ஆகும்.

Comments