சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் இல்லை; ஏன் தெரியுமா?


சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் இல்லை; ஏன் தெரியுமா?


பெண்களின் தியாகம், சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனால் அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று பெண்களின் பெண்களுக்கு பரிசு மற்றும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், மகளிர் தினத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக தமிழ்நாட்டின் மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் (mamallapuram) சுற்றுலா பயணிகள் புராதான சின்னங்களை எவ்வித கட்டணங்களும் இன்றி பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை கல், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை எவ்வித கட்டணமும் இன்றி பார்வையிடலாம். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி தெரிவிக்க வந்த மேயர்; மழலைகள் செய்த செயல்! சுவாரஸ்யம்


மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட வழக்கமாக உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.40 மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 கட்டணமாக பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

Fall Winter Boots

Dark Gray and Blue Chevron Personalize Beach Towel by MyCPStore

Free People Bohemian Patched Coat quot Songbird quot