மீண்டும் முழு ஊரடங்கு.. மறு உத்தரவு வரும் வரை - அரசு அதிரடி!


மீண்டும் முழு ஊரடங்கு.. மறு உத்தரவு வரும் வரை - அரசு அதிரடி!


சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் சாங்சுன் நகரில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கை திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சாங்சுன் நகர் முழுவதும் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் சாங்சுன் நகரில், கொரோனா பரவல் காரணமாக, பொது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்கின்றனர். மேலும், அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே, சாங்சுன் நகர் முழுவதும் கொரோனா பரிசோதனை எடுக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Fall Winter Boots

Experience the Magic of Christmas in London with these Festive Activities

Dark Gray and Blue Chevron Personalize Beach Towel by MyCPStore